தலையங்கம்
யாருக்கும் வெட்கமில்லை!
முதல் பக்கம்
ஸ்பெஷல்ஸ்
தரிசனம்
விதையின் கதை
அதிரடி சரவெடி
ஜாலி சந்திப்பு
பிசினஸ் தெனாலி
கேலரி
நடிகர்கள்
நடிகைகள்
படங்கள்
ஃபங்ஷன்... ஃபங்ஷன்!
செய்திகள்
இந்தியா
இலங்கை
தமிழ்நாடு
சினிமா
திரை தெனாலி
தெனாலி திரை
விமர்சனம்
மற்றவை
இதழ்கள்
தெனாலி சாய்ஸ்
டிரெய்லர்
தெனாலி சேனல்
பொக்கிஷம்
Sorry, you need to activate JavaScript in your browser.
ஜூலைப் படுகொலைக்கு நீதி கேட்போம்: ருத்ரகுமாரன்
வாஷிங்டன்:
இ
லங்கையில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கும், இழந்த பலகோடி மதிப்பு தமிழர் சொத்துகளுக்கும் சர்வதேசச் சட்டப்படி நீதி கேட்போம். அதற்காக உலகத் தலைவர்களை சந்தித்து பேசுவோம்" என்று நாடு கடந்த தமிழீழ அரசின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ருத்ரகுமாரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழீழ மக்களுக்கெதிரான இலங்கையின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தச் சாட்சியமாக அமைந்த 1983ம் ஆண்டு ஜூலைப் படுகொலை நடைபெற்று 27 ஆண்டுகள் நிறைவாகின்றன.
சிறிலங்கா அரச இயந்திரத்தின் உதவியுடன் நடத்தி முடிக்கப்பட்ட இந்த இனப்படுகொலையின் போது 3,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் மதிப்பிலான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி உட்பட்ட எமது விடுதலைப் போராளிகளும், மக்களும் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் மக்கள் தென்னிலங்கையிலிருந்து வெளியேறி, பாதுகாப்புத் தேடி தமது பாரம்பரியத் தாயகப் பகுதியாகிய வட-கிழக்கில் தஞ்சம் அடைந்தனர். நமக்கு பாதுகாப்பானது என்பதனை இந்நிகழ்வு உலகுக்கு உணர்த்தியது. நமது தாயக விடுதலைக்கான போராட்டமும் எழுச்சி கண்டது.
சிறிலங்காவின் இன அழிப்பு எண்ணமும், நடவடிக்கைகளும் மிகத் தீவிரமடைந்திருக்கிறதேயன்றி எந்த வகையிலும் மாற்றமடைந்து விடவில்லை என்பதனை 2009 ஆண்டு மே வரை நடந்தேறிய நிகழ்வுகள் எமக்கு இரத்தமும் சதையுமாக உணர்த்தி நிற்கின்றன.
இனப் படுகொலை எல்லா இடங்களிலும் ஒரே வடிவம் எடுப்பதில்லை. ஒடுக்குமுறையாளர்களைப் பொறுத்து அது பல்வேறு வடிவங்களிலும் தளங்களிலும் இடம் பெறுகிறது. போரின் இறுதிக் கால கட்டங்களில் எமது மக்கள் மீது சிறிலங்காப் படைகள் புரிந்த இனப் படுகொலையில் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் அழிக்கப்பட்டனர்.
பல்லாயிரக்கணக்கானோர் ஊனமாக்கப்பட்டனர். 3 லட்சம் வரையிலான மக்கள் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர். இன்றும் இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் முகாம்களில் தான் வைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்குரிய புனர்வாழ்வும் புனர் நிர்மானமும் வழங்கப்படவில்லை.
இவர்களை விட அடைத்து வைக்கப்பட்டுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளின் நிலை அச்சம் தருவதாகவே உள்ளது. 1983ல் நடந்தேறிய சிறைச்சாலைப் படுகொலைகளின் நினைவுகள் எமது அச்சத்தை மேலும் அதிகரிக்கின்றன.
1983ம் ஆண்டு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் இவ்வேளையில், சிறிலங்கா அரச படைகளால் கொல்லப்படட் 2,00,000 க்கும் மேற்பட்ட எமது மக்களையும் சாட்சியாக நிறுத்தி நாம் அனைத்துலக சமூகத்திடம் நீதி கோருகிறோம்.
நீதி வழங்கப்படாத எந்த ஒரு மக்கள் சமூகமும் அதன் காயங்களை என்றுமே ஆற்றிவிட முடியாது. நீதியின் பெயராலும் அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையிலும் எமது மக்களுக்கு நியாயம் கோரி அனைத்துலக சமூகத்திடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
1. இனப் படுகொலைக்குள்ளாகி வரும் மக்கள் சுயநிர்ணயத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்வதற்கு ஒரேவழி அவர்களுக்கான ஒரு நாடு அமைவதேயாகும். எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தமிழீழத் தனியரசு அமைக்கப்படுவதே ஒரேவழி என்பதால் அனைத்துலக சமூகம் அதற்கு தனது ஆதரவினை வழங்க வேண்டும்.
2. சிறிலங்கா அரசால் கொடும் சிறைக் கூடங்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள எமது போராளிகள் போர்க் கைதிகளாக மதிக்கப்பட்டு விடுதலை செய்யப்படவேண்டும். சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் போராளிகளினது பெயர் விபரங்கள் உடனடியாக வெளியிடப்படுவதற்கும், போராளிகளை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் சென்று பார்வையிடுவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
3.அனைத்துலக சமூகம் நீதியின் அடிப்படையிலும் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் அடிப்படையிலும் எமது மக்களுக்காக உரத்துக் குரல் கொடுக்க வேண்டும். அத்தோடு இத்தருணத்தில் 1983 ஜூலை படுகொலையின் போது தமக்கு வரக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது, மனிதாபிமான உணர்வின் அடிப்படையில் பல தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாத்த சிங்கள மக்களை நாம் நன்றியுடன் மனதில் இருத்துகிறோம்.
சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாகப் புரிந்து வந்த இனப் படுகொலையை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்த சிங்கள முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரது கரங்களையும் தோழமையுணர்வுடன் நாம் இறுகப் பற்றிக் கொள்கிறோம். உங்களது குரல்கள் பெரும்பான்மையின் மத்தியில் பலவீனமாக இருந்தாலும் நீதியின் முன்னே வலுவானவை. நீதிக்கான எமது போராட்டத்துக்கு உங்கள் இணைவு மேலும் வலுச் சேர்க்கும்.
1983ம் ஆண்டு இனப் படுகொலையினை நாம் நினைவுகூரும் இவ் வேளையில், எம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணைகளை வலியுறுத்தியும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்யக் கோரியும் ஜி. சிவந்தன் எனும் தமிழ் செயல்வீரன் பிரிட்டனிலிருந்து ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைமைப் பணிமனை நோக்கி ஜூலை 23ம் தேதி இரவு நடைப்பயணம் ஒன்றினை ஆரம்பிக்கிறார்.
இரண்டு வாரங்கள் இடம் பெறப்போகும் இந்நடைப் பயணத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆதரவினைத் தெரிவிப்பதோடு, இப்போராட்டம் பூரண வெற்றியடைவதற்குரிய பங்களிப்பினை வழங்குமாறு தமிழ் மக்களை வேண்டி நிற்கிறது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்று பல்வேறு அரசாங்கங்களுக்கு தமிழின அழிப்புத் தொடர்பான ஆவணம் ஒன்றை அனுப்பி வைக்கிறது. இதனைத் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் பன்னாட்டுத் தலைவர்களை நேரடியாக சந்தித்து, சிறிலங்கா அரசின் இனவொழிப்புக்கு எதிராக நீதிகோரும் வகையிலான அரசியல் செயற்பாடுகளுக்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இனப் படுகொலைக்குள்ளாகிவரும் ஒரு மக்கள் கூட்டம் தமது வாழ்வினை இனப் படுகொலை புரிபவர்களிடம் இருந்தோ அல்லது மற்றோரிடம் கெஞ்சியோ மீட்டுவிட முடியாது. சலுகைகளின் அடிப்படையில் இல்லாமல் நீதியின் அடிப்படையிலும், அனைத்துலக சட்டங்களுக்கமைய எமக்குரிய உரிமைகளின் அடிப்படையிலுமே நமது குரல்கள் தொடர்ந்து ஒலிக்கும்" என்று தனது அறிக்கையில் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை
இந்திய ராணுவத் தளபதி இலங்கை சென்றார்
கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கும் இலங்கை வீரர்
இந்திய ராணுவத் தளபதி இலங்கை செல்கிறார்
கச்சத்தீவை மீட்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது நான்: ஜெ.
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
ராஜபக்சேவை சந்தித்தார் நிருபமா ராவ்
பிரபாகரன் பட விற்பனை வழக்கு: போலீசுக்கு நோட்டீஸ்
செப்.10 ல் தமிழர் இறையாண்மை மாநாடு: திருமா.
தமிழர்கள் இரும்பைப்போல் உறுதியானவர்கள்: நிருபமா ராவ்
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது: எஸ்.எம்.கிருஷ்ணா
இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்: டி.ஆர்.பாலு
சிங்களர்களுக்கு வீடு கட்ட இந்தியா நிதி : பழ.நெடுமாறன் புகார்
தமிழர் பகுதிகளில் நிருபமா ராவ் இன்று ஆய்வு
விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு அரசியல் இயக்கம்: நியூசிலாந்து நீதிமன்றம்
முத்துக்குமார் பற்றி ஆவணப் படம் வெளியீடு
இலங்கை செல்கிறார் நிருபமா ராவ்
விமான நிலையத்தில் விசா தரும் முறை ரத்து: இலங்கை அரசு
இலங்கை கம்யூ. கட்சி மாநாட்டில் தமிழக எம்.பி.
கோத்தபயா ராஜபக்சேவை கொல்ல முயன்றதாக 3 பேர் கைது
போராடுவது தவறு என்றால் அந்த தவறை தொடர்ந்து செய்வேன்: சீமான்
எம்.பி.க்கள் குழு இலங்கை செல்லாது: இந்திய அரசு
தீர்ப்பாயத்தில் சீமான் ஆஜர் செய்யப்பட்டு மீண்டும் சிறையிலடைப்பு
விஷம் கக்குகிறார் குமரன் பத்மநாபன்: வைகோ ஆவேசம்
தமிழர் மறுவாழ்வுப் பணிகள் மந்தம்: கருணாநிதி புகார்
தேர்தலில் காங்.கிற்கு பாடம் புகட்டுவோம்: பழ.நெடுமாறன்
ரணில்-பிரபாகரன் அமைதி ஒப்பந்த ஆவணம் மாயம்
இலங்கையில் 68 ஆயிரம் தமிழ்ப்பெண்கள் விதவை
மீனவர்கள் பலியாக இலங்கை சட்டமே காரணம்: இலங்கை மீனவர்கள்
தமிழர்களுக்கு எதிரான கட்சி காங்.என பிரச்சாரம்: கார்த்திக் சிதம்பரம் வருத்தம்
யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரகம்: நிருபமா தகவல்
செப்டம்பரில் இலங்கைக்கு சிறப்புத் தூதர் பயணம்: நிருபமா
இலங்கை பிரச்சனை: கருணாநிதியை சந்திக்கிறார் நிருபமா ராவ்
தமிழர்களால் ஆபத்து- கனடா அரசை அச்சுறுத்தும் இலங்கை
பிரபாகரனை காப்பாற்ற முயன்று தோற்றேன்: கே.பி சொல்கிறார்
ராஜபக்சேவிடம் போர்க்குற்ற விசாரணை: அமெரிக்க நிறுவனம் வலியுறுத்தல்
சிங்களர் பற்றி சீமான் கூறியதில் தவறில்லை: வைகோ
பிரபாகரனை மீண்டும் சந்திப்பேன்: வைகோ
பொன்சேகா குற்றவாளி: ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
சீனா அமைக்கும் துறைமுகம் ராணுவத்துக்கல்ல: அமைச்சர்
இலங்கையில் சீனா அமைக்கும் துறைமுகம்
எஸ்.எம்.கிருஷ்ணாவை டிஸ்மிஸ் செய்யவேண்டும்: பழ.நெடுமாறன்
இலங்கையை எச்சரியுங்கள்: திருச்சி சிவா ஆவேசம்
3 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்: தா.பா
போர்க்குற்ற ஆதாரங்களைத் திரட்டும் பினாங்கு துணை முதல்வர்
3 ஆயிரம் ஏக்கர் தமிழர் நிலங்களில் சிங்களர் ஆக்கிரமிப்பு
புலிகளின் அனைத்துலக அமைப்பு தொடர்கிறது: அமெரிக்கா
ராஜபக்சேவை பாதுகாப்பவர்கள் யார்?: நல்லகண்ணு கேள்வி
தமிழர் பகுதிகளில் சீன ராணுவம்
அறிவுரை கூற அமெரிக்காவிற்கு தகுதியில்லை: இலங்கை
தமிழர்களுக்கு மாநில சுயாட்சி: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
இலங்கையின் போக்கு மாறவேண்டும்: 'தி எல்டர்ஸ்' அமைப்பு கோரிக்கை
11 ஆயிரம் புலிகளை விடுவிக்க வேண்டும்: இலங்கை எம்.பி.
பிரபாகரன் தயாரை சந்தித்த தமிழ் எம்.பி.
இலங்கைக்கு சில தினங்களில் இந்திய பிரதிநிதி: ப.சி
கொழும்புவில் தனியார் டி.வி.நிலையத்தின் மீது தாக்குதல்
ராஜபக்சே மகனுடன் ராகுல்காந்தி பேச்சு?
சரணடைவதில் வேகம் காட்டாத பிரபாகரன்: கே.பி. சொல்கிறார்
இந்தியா தூதுரை அனுப்பட்டும்: இலங்கை ஒப்புதல்
தமிழர்களுக்கு புலிகள் நிதியில் நிவாரணம்: இலங்கை திட்டம்
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
தமிழர் பகுதிகளுக்கு முழு சுயாட்சி வழங்க இந்தியா வலியுறுத்த வேண்டும்: யெச்சூரி
மறுவாழ்வுப் பணிகளை ஆய்வு செய்ய இந்திய அதிகாரி: தமிழக முதல்வருக்கு பிரதமர் கடிதம்
இலங்கையில் சீன ராணுவ தளம் : வைகோ எச்சரிக்கை
ஈழத் தமிழர்களுக்கு கருணாநிதியால் நன்மையில்லை: கிருஷ்ணசாமி
ஜூலைப் படுகொலைக்கு நீதி கேட்போம்: ருத்ரகுமாரன்
தனிமைச் சிறையில்தான் உள்ளேன் : சீமான்
தலையிடாதே: அமெரிக்கா, ஐ.நா.வை எச்சரிக்கிறது இலங்கை
தமிழக மீனவர்கள் மீது வெடிகுண்டு வீசும் சிங்களர்கள்
கொடிகாமம் முகாமில் உணவின்றி அவதியுறும் தமிழர்கள்
போராளிகள் எல்லாம் பயங்கரவாதிகள்: இலங்கை சொல்கிறது
ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத்தரத் தயார்: உலகப்புகழ் வக்கீல் லூயீஸ் மொரீனோ
கொழும்பில் 10 ஆயிரம் தமிழர்களின் வாக்குரிமை ரத்து
கருணாநிதியுடன் த.தே.கூட்டமைப்பு எம்.பி.க்கள் சந்திப்பு
இலங்கைக்கு ஆய்வுக் குழு: மன்மோகன் உறுதி
இலங்கைக்கு சிறப்புத் தூதர் தி.மு.க. மீண்டும் வலியுறுத்தல்
சிறப்புத் தூதர்: கருணாநிதி யோசனைக்கு இலங்கை எதிர்ப்பு
இலங்கையில் 20 ஆயிரம் பேருக்கு 'டெங்கு'
ஐ.நா.மீது வழக்கு தொடரும் ராஜபக்சே
2 லட்சம் ஈழத்தமிழர்களுக்கு வீடுகள்: ப.சி
இலங்கையில் சீன துறைமுகம்: பழ.நெடுமாறன் எச்சரிக்கை
இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்ப வேண்டும்: மன்மோகனுக்கு கருணாநிதி கடிதம்
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு: கருணாநிதிக்கு மன்மோகன் கடிதம்
சீமான் ஜாமீன் மனு தள்ளுபடி
ஐ.நா.விசாரணைக்குழுவினர் 8 ஆக அதிகரிப்பு
இலங்கையில் ஐ.நா.விசாரணை நடந்தால் இந்தியாவும் அப்பலப்படுத்தப்படும்: தா.பா.
இலங்கைத் தூதரகம் முன்பு ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு
இலங்கை தூதரகத்தை மூட ஆர்ப்பாட்டம்: வைகோ, பழ. நெடுமாறன் கைது
சுடான் அதிபர் மீது இனப்படுகொலை வழக்கு: ராஜபக்சே மீது எப்போது?
கிளிநொச்சியில் கூடும் இலங்கை அமைச்சரவை
சீமானை விடுதலை செய்ய வேண்டும்: பெ.மணியரசன்
சீமான் தலைமறைவாக வில்லை: நாம் தமிழர் இயக்கம்
இலங்கைக்கு கண்டனம் தெரிவித்ததால் சீமான் மீது 4 வழக்குகள்
ஐ.நா.விசாரணைக்கு ஒத்துழைப்பு: இலங்கைக்கு அமெரிக்கா கண்டிப்பு
இலங்கையைக் கண்டித்து வேதாரண்யத்தில் ஜூலை-16 ல் ஆர்ப்பாட்டம்: வைகோ
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு: த.தே.கூட்டணியினரிடம் மத்திய அரசு உறுதி
ஈழப்பிரச்சனையில் தமிழக அரசை கேட்காமல் மத்திய அரசு செயல்படக்கூடாது: வி.சி. தீர்மானம்
இலங்கைத் தூதரகத்தை மூடக்கோரி ஜூலை-14 ல் ஆர்ப்பாட்டம்: பழ.நெடுமாறன்
இலங்கையை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
மீனவர் கொல்லப்பட்டதை மத்திய அரசு கண்டிக்காதது ஏன்?: சீமான்
இலங்கையை கண்டித்து வேதாரண்யத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம்
அமைச்சர் பதவியிலிருந்து விமல் வீரவன்ஷா ராஜினாமா?
ஐ.நா.வின் விசாரணைக்கு ஆதரவு கோரி ரஷ்ய தூதரிடம் சீமான் மனு
அரசியல் தீர்வுக்கு உதவுங்கள்: த.தே. கூட்டமைப்பினர் கோரிக்கை!
ஐ.நா.வுக்கு எதிரான போராட்டங்களை தடுக்காத இலங்கை அரசு: பான் கீ மூன் புகார்
ஐ.நா. குழுவைக் கலைக்கக்கோரி இலங்கை அமைச்சர் உண்ணாவிரதம்
இலங்கையில் ஐ.நா. அலுவலகம் மூடல்: பான் கீ மூன் உத்தரவு
ஐ.நா.குழுவை கலைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை: ஐ.நா. திட்டவட்டம்
இலங்கையில் ஐ.நா.விசாரணை: அமெரிக்கா ஆதரவு!
இலங்கைக்கு பணியாமல் ஐ.நா.விசாரணை செய்யவேண்டும்: ருத்ரகுமாரன்
பான் கீ மூன் உருவபொம்பை எரிப்பு: ஐ.நா.அதிர்ச்சி
பார்வதியம்மாள் இந்தியா வர விசா அளிக்க நீதிமன்றம் உத்தரவு
ரூ. 700 கோடி வர்த்தகச் சலுகை ரத்து: ஐரோப்பிய நாடுகள் அதிரடி
மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்
ஆஸி.யில் குடியேற இலங்கைத் தமிழர்களுக்கு அனுமதி
ஐ.நா.சபை அலுவலகத்தை முற்றுகையிட்ட இலங்கை அமைச்சர்
தமிழர்களுக்கு எதிரானவள் என முத்திரைக் குத்தப்பார்க்கிறார் கருணாநிதி: ஜெ.
பொன்சேகா உயிருடன் புதைக்கப்படுவார்: இலங்கை அமைச்சர்
பார்வதியம்மாளுக்கு இந்தியாவில் சிகிக்சை பெறும் திட்டம் இல்லை: மத்திய அரசு
ஐ.நா. விசாரணை குழுவுக்கு எதிரான நடவடிக்கை இந்தியா பரிசீலனை
கரும்புலிகள் தினம்: புலிகள் தலைமைச் செயலகம் பெயரில் அறிக்கை!
டக்ளசிடம் ரூ 50 கோடி நஷ்ட ஈடு கேட்டு பெண் எம்.பி. வழக்கு
இந்திய அரசுடன் பேச தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் திட்டம்
ஐ.நா.விசாரணைக்குழு: நாடு கடந்த தமிழீழ அரசு வரவேற்பு
பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்த்த இந்திய கடற்படைத் தளபதி!
ஐ.நா.விசாரணைக்குழு: இந்திய அரசின் மவுனத்தால் இலங்கை அதிர்ச்சி
இலங்கையில் ஐ.நா. விசாரணை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு
நளினி கோரியதாலேயே புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்: சிறைத்துறைத் தலைவர்
ஐ.நா.சபை குழு இலங்கை செல்வது நம்பிக்கை அளிக்கிறது: ஜெ.
பார்வதியம்மாள் வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கு மாற்றம்!
Powered by Minveli | All rights reserved ©2010 Thenaali Entertainment Pvt. Ltd.