பெப்சி இனி தேவையில்லை!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை திரையரங்கில் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்ற்ப்பட்டன.

மூன்று நாட்களுக்கு முன்பு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சார்ந்த சங்கங்கள் தன்னிச்சையாக ஓரு ஊதிய உயர்வை நிர்ணயம் செய்து, அதை பத்திரிக்கைகள் வாயிலாக அறிவித்து விட்டார்கள். வழக்கமாகத் தயாரிப்பாளர் சங்கமும், தொழிலாளர்கள் சம்மேளனமும் கலந்து பேசி அனைத்து பிரிவுகளுக்கான கையெப்பம் ஆன பிறகு தான் அது ஒப்பந்தம் எனப்படுகிறது. அதை மீறி அவர்கள்  தன்னிச்சையாக, ஊதிய உயர்வை நிர்ணயம் செய்து அறிவித்திருப்பது அந்த நடைமுறை வழக்கத்தை மீறிய செயல் ஆகும்.

ஆகவே, இனிமேல் எங்கள் சங்கத்திற்கும், தொழிலாளர் அமைப்பிற்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. ஆகவே, எங்கள் சங்கத்தின் தயாரிப்பாளர்கள் இனிமேல் தங்கள் இஷ்டபடி யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்துகொள்ளலாம்.

இதற்கு உடன்பட்டு தொழில் செய்ய வரும் தொழிலாளர்களுக்கு, நாங்கள் ஒரு குழு அமைத்து, அவர்களது ஊதியத்தை நிற்ணயம் செய்து அதை அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் அறிவித்து கண்டிப்பாக அதைக் கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தும்.

அதை மீறும் தயாரிப்பாளர்களுக்கு, எங்களது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எந்தவித ஒத்துழைப்பும் அளிக்காது.

மேற்கண்ட தீர்மானங்கள் இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட 300க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் ஏகமனதான ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.
திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்